தமிழகத்தில் தொடர் விடுமுறையால் அதிகரித்த ஆம்னி பேருந்து கட்டணம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் வர இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆம்னி பேருந்துகளில் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு:
தமிழகத்தில் இந்த வாரம் சனி, ஞாயிறுக் கிழமை மற்றும் திங்கள் கிழமை சுதந்திரதினம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து ரயில் நிலையங்களில் செல்ல முன்பதிவு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் நிரம்பிவிட்டன.
மேலும் காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது. அதனால் பலர் ஆம்னி பேருந்துகள் பக்கம் திரும்பி இருக்கின்றனர். பலர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ரூ. 800ஆக இருந்த கட்டணம் தற்போது 2300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் – 68 பள்ளிகள் தேர்வு
Exams Daily Mobile App Download
பண்டிகை காலங்களில் இது போல விதிகளை மீறி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண உயர்வு செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது போன்ற நேரத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க அரசும் பல எச்சரிக்கையையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.