ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் கவனத்திற்கு!
கொரோனா வைரஸ் பல்வேறு உருவங்களாக உருமாறி புதிய வகை கொரோனவாக மாறுகிறது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் 10 மடங்கு வீரியம் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே கொண்டது.
ஒமிக்ரான் அறிகுறிகள்
கொரோனா வைரஸ் பல்வேறு உருவங்களாக உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனவாக மாறுகிறது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை வாய்ந்ததாக உள்ளது. விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவ கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!
இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் போட்ஸ்வானாவில், ஹாங்காங், இஸ்ரேலில் உள்ளிட்ட 29 நாடுகளில் இதுவரை 373 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகிறது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’ – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே காணப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு அமைப்புகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் பல்வேறு விதிமுறைகளை பல நாடுகள் அறிவித்து வருகின்றன. தற்போது வர இருக்கும் கொரோனா பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது