இந்தியாவில் மீண்டும் வீரியமாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ்? WHO அதிர்ச்சி தகவல்!

0
இந்தியாவில் மீண்டும் வீரியமாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ்? WHO அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் மீண்டும் வீரியமாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ்? WHO அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் மீண்டும் வீரியமாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ்? WHO அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக ஓமிக்ரானில் இருந்து புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதிய வகை வைரஸ்:

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை தாக்கம் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வீரியத்துடன் பரவி வருகிறது. இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் என்று கூறுகின்றனர். முதன் முதலில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் உருவாகியது. இது எதிர்பாராத அளவுக்கு உயிர் பலி வாங்கியது.

Exams Daily Mobile App Download

இந்த வைரஸால் நடுத்தர வயதினர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசிகள் கண்டிபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக ஓரளவு பாதிப்புகள் குறைந்து வந்தது. பிறகு 2021ம் ஆண்டின் இறுதியில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த ஓமிக்ரான் வைரஸ் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கும் ஓமிக்ரான் வைரஸ் பரவியது. மேலும் இது குழந்தைகளையும் தாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோருக்கான அறிவிப்பு – அரசின் சிறப்பு வகுப்புகள்!

ஆனால் ஓமிக்ரான் இந்தியாவில் பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது இந்த ஓமிக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் BA.2.75 என்ற புதிய துணை வகை ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிக்கபட்டுள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ் BA.2.75 ஆக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தடுப்பூசிகள் செலுத்தாத மக்கள் விரைந்து 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!