தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஒமிக்கிரான் தொற்று விழிப்புணர்வு! நெறிமுறைகள் வெளியீடு!
உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்கிரான் தொற்று குறித்து விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒமிக்கிரான் தொற்று விழிப்புணர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ளதே தவிர முற்றிலும் அளிக்கப்படவில்லை என்பதால் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு இடையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்!
பின்னர் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநில வாரியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வகையாக ஒமிக்கிரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தீவிரமாக பரவி வரும் இந்த தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அட்டவணை வெளியீடு!
அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெப்பநிலை சோதனை, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளி, பள்ளிகளை சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை முறையே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் NCC, NSS, விளையாட்டு, இறைவணக்க கூட்டம் மற்றும் கலாச்சார கூட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.