தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!!
நேபாள நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஓமைக்ரான்:
கடந்த வருடம் சீனாவின் உஹான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவி பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து நாடுகளும் மக்களுக்கு செலுத்தியது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
விதியை மீறிய நடிகர் கமல்ஹாசன் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கேள்வி!
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. தொண்டை கரகரப்பு, கடுமையான சோர்வு, தசை வலி போன்றவைகள் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.’
சபரிமலை கோயில் பாதையில் மருத்துவ வசதி – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
அதனை தொடர்ந்து அதன் அண்டை நாடான நேபாளத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 66 வயதான நபர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 71 வயதுடையவருக்கும் தொற்று ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று பரவலை அடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு அந்நாட்டு அரசு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.