மாநிலத்தில் அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!

0
மாநிலத்தில் அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
மாநிலத்தில் அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!
மாநிலத்தில் அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்!

ஓமைக்ரான் பரவல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்

உலகின் பல்வேறு நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முதல் முதலில் கர்நாடக மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் தற்போது மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வேகமாக பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்டாவை போல பரவுகிறது ஓமிக்ரான் – மத்திய அரசு தகவல்! பொதுமக்கள் அச்சம்!

இதனால் தொற்று அதிகம் பரவாமல் தடுக்க தொற்று பாதித்த மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மணிப்பூர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 40% பாதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் 3,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேற்று 5,368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் – கனமழை எதிரொலி!

மும்பையிலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. மும்பை நகரில் மட்டும் 3,555 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் 2 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை மற்றும் 144 தடையையும் விதித்துள்ளது. அத்துடன் மும்பையில் உள்ள கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள் திறக்கவும் மற்றும் ஊர்வலம் செல்லவும் தடை என்றும் இந்த கட்டுப்பாடு ஜனவரி 15ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!