இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர்க்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் தொற்று:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாட்டாலும், அரசின் போதிய நடவடிக்கைகளாலும் கட்டுப்பாடுகளாலும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது . தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு – நெல்லை சம்பவம் எதிரொலி!
அதனை தொடர்ந்து தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வேகமாக பரவும் என்றும் இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 125 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 100% தடுப்பூசிகளை செலுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.
மாநில அரசின் கல்வித்துறையில் 53,7000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநில அரசுகள் தடுப்பு பணியாக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன.