சென்னையில் மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் வேகமெடுக்கும் ஓமைக்ரான் ! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு பற்றி டிசம்பர் 31ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 34 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளதாக முன்னதாகவே தகவல் வந்திருந்தது. அதன் பின்பு 42 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்தது.
ஜனவரி 3ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!
தற்போது தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்புக்கு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஓமைக்ரான் அறிகுறி 118 பேருக்கு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். இதையடுத்து 118 பேர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் தமிழகத்தில் மொத்தம் எத்தனை பேருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக தெரிவிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வகையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. பின்பு இரவு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வருக்கு நன்றி!
தமிழகத்தலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மற்றும் இரவு ஊரடங்குகள் தொடர்பாக டிசம்பர் 31ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரிய வரும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.