டெல்டா வகை வைரஸ்களை விட இரட்டிப்பாக பரவும் ஓமைக்ரான் – மருத்துவ நிபுணர்கள் தகவல்!!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஓமைக்ரான் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்களை விட இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளன.
ஓமைக்ரான் வைரஸ்:
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வர இருக்கும் கொரோனா நோய் பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான் ‘ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் வெளியீடு – TRB குற்றவியல் நடவடிக்கை!
அத்துடன் இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவல் விகிதம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளன. மேலும் ஓமைக்ரான்க்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் செயல்படும் என்றும் பல்வேறு ஆய்வுகளை மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஓமைக்ரான் வைரஸ் பரவல் விகிதம் இன்னும் சில காலங்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மருத்துவ லான்செட் ஆய்வு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதா
தமிழக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை – கொரோனா பரவல் எதிரொலி!அமைச்சர் தகவல்!!
அதை தொடர்ந்து டெல்டா வகை கொரோனா பாதிப்பு 5 நாட்களில் இரட்டிப்பானதாக மாறியது. தற்போது பரவி வரும் புதிய வகை ஓமைக்ரான் 2 நாட்களில் இரட்டிப்பாவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளன. தற்போது நோய் பரவும் 11 நாடுகளில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருந்தால் நோய் தொற்று பரவும் விகிதம் மற்றும் பாதிப்பும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஓமைக்ரான் பாதிப்பின் தீவிரம் பற்றி உறுதியாக தெரியவில்லை. அதனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வது முகக்கவசம் அணிந்து கொள்வது போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றன.