இந்தியாவில் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 200ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓமைக்ரான் தொற்று பரவல் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமைக்ரான் தொற்று:
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு தீவிரமாக பரவிய கொரோனா பெருந்தொற்று படிப்படியாக அவதாரங்களை எடுத்து வருகிறது. அதாவது கொரோனா தொற்று இதுவரை ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உள்ளிட்ட அவதாரங்களை எடுத்துள்ளது. இத்தகைய உருமாறிய வகைகளில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் சற்று வீரியம் உடையதாக இருந்ததால் பாதிப்பு கொஞ்சம் அதிக அளவில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருமாறிய கொரோனா தொற்று வகைகளின் வரிசையில் ஓமைக்ரான் என்ற தொற்று இடம் பெற்றுள்ளது.
மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இந்த ஓமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து பிரிட்டன், இந்தியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, நைஜீரியா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரங்களில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு ஓமைக்ரான் தொற்று கண்டறியபட்ட பெரும்பாலானோர் ஓமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ் மொழியில் 40% மதிப்பெண் கட்டாயம்!
அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று தற்போது மகாராஷ்டிரா மற்றும் டில்லியில் மட்டும் தலா 54 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தொற்று அதிகரிப்பதால் நாடுகளுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் தொற்றின் தீவிர பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.