ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்து நாடு திரும்பினார் – டெல்லியில் அமோக வரவேற்ப்பு!
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி சிந்து இன்று நாடு திரும்பியுள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் வீராங்கனை:
ஒலிம்பிக் போட்டிகள் 2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் நடப்பாண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் அனைத்தும் நடந்து வருகிறது. நடப்பாண்டில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை – சுகாதாரத்துறை அறிவிப்பு!
இந்நிலையில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாயோவை எதிர்த்து ஆடி 21 -13, 21 – 15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் கைப்பற்றினார். கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெற்றுள்ள இரண்டாவது பதக்கமாகும். போட்டிகளை இன்று பி.வி.சிந்து நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையாயத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு பி.வி சிந்து பேட்டி அளித்தார். அப்போது, பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். பலரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பேட்மிண்டன் சங்கம் உள்ளிட்ட பலரும் வரவேற்க வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தன் வாழ்வின் பெருமையான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ளார்.