மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – முக்கிய நடவடிக்கை!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ள ராஜஸ்தான் அரசாங்கம் OPS பலன் இதன் அடிப்படையில் கிடைக்கும் என தகவல் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
சமீப காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை அளித்து வரும் நிலையில் இது குறித்து முடிவு எடுப்பதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஆனால், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பழைய ஓய்வூதியத் திட்ட பலனை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக பழைய ஓய்வூதியத் திட்டம் இதன் அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!
இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில், 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மற்றும் அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்துவதற்கான விதிகளில் தேவையான திருத்தங்களுக்கு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசு எடுத்த இந்த முடிவிற்குப் பிறகு, அனைத்து ஊழியர்களும் ஓய்வு பெறும்போது ஓய்வூதியப் பலன்களைப் பெறத் தகுதியடைவார்கள் ஆவர்.
Exams Daily Mobile App Download
இதனுடன், ராஜஸ்தான் அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு பணமில்லா மருத்துவ வசதியும் கிடைக்கும். அதே நேரத்தில் ஒரே மாதிரியான தகுதித் தேர்வு நடத்துவது, நேரடி ஆட்சேர்ப்பில் நேர்முகத் தேர்வை நீக்குவது, சில பதவிகளில் நேர்காணலுக்கு அதிகபட்சமாக 10 சதவீத வெயிட்டேஜ் நிர்ணயம் செய்வது போன்ற பல முக்கிய முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பலன்கள் குறைவாக இருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாநிலங்களவையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.