அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

1
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அமலில் உள்ளது. அதனால் பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்திட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் இது தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இந்தியாவில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கடந்த 2004ம் ஆண்டு CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து தற்போது வரை அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Follow our Instagram for more Latest Updates

அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பணிக்கொடை, குடும்ப பாதுகாப்பு நிதி, கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைப்பதில்லை. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் இழப்புகள் தான் அதிகமாக உள்ளதாகவும் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி சத்தீஷ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இம்மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் அறிவித்துள்ளார். இது அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!