மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து வருபவர்களின் ஒரே கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆனால் இது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கான சலுகைகள் குறைவாக இருப்பதாகவும், மேலும் அதன் மூலம் கிடைக்க வேண்டிய பலனும் சரியாக கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்களும் இது குறித்து கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பல துறைகளில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைந்த அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பென்சன் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதார திட்டத்தின் கீழும் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.