தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆரம்ப காலத்தில் அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அரசு இது தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர் .

ஓய்வூதியத் திட்டம்:

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் தருவாயில் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு மாற்றியமைத்தது. அதன்படி தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கில் சேமிக்கப்படும். இதனுடன் இந்த தொகைக்கு இணையாக அரசு சார்பாக குறிப்பிட்ட தொகை செலுத்தும்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!

இந்த தொகை அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிவடையும் போது 60% மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் மீதமுள்ள தொகை LIC உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து மாதந்தோறும் வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்தவொரு பலனும் கிடைத்ததால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அரசு இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இதில் குறிப்பாக சேலம் கோட்டை மைதானத்தில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இதனை திரும்ப வழங்க வேண்டும் என்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்கள் போன்ற தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!