அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நிதித்துறை உத்தரவு!
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவையும் நிதித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் படியான அறிவிப்பு ஒன்று மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி 2005 அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மாற்றி நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் அரசு, தற்போது, பணி ஓய்வு பெறும்போது, சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதன் கீழ், அரசு விதிகளை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத்தை அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார். அதன் பிறகு NPSக்கான ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்பட்டது. இந்த முடிவின்படி, 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மார்ச் 31, 2022க்கு முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதியின்படி ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு மாநிலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தத்தை நிறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 39000 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.