தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு இதுவரை பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் தற்போது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை தொகுத்து வல்லுநர் குழு அரசிடம் வழங்கியுள்ளது. இதனை அரசு ஆராய்ந்து விரைவில் அறிவிப்புகளை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கலாம் முடிந்தவுடன் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டது. அத்துடன் அவர்களின் மறைவுக்கு பின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதனை கடந்த 2004ம் ஆண்டு ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அரசு அம்பலப்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அத்தொகையை திரும்ப எடுத்து கொள்ளலாம். மேலும் இத்தொகையுடன் அரசு சார்பாகவும் கூடுதல் தொகை செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை? அமைச்சர் விளக்கம்!

இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது வழங்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தின் படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக் கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை கிடைப்பதில்லை. அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் தற்போது மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கேரளா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வல்லுநர் குழுவின் அறிக்கையை பொறுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்திலும் வல்லுநர் குழுவால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பெறப்பட்டு அதனை அரசு பரிசீலனை மேற்கொள்ளும். அதன் பின் இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!