மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? காங்கிரஸ் உறுதி!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? காங்கிரஸ் உறுதி!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? காங்கிரஸ் உறுதி!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? காங்கிரஸ் உறுதி!

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

ஓய்வூதியத் திட்டம்

சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் ஒரு முக்கிய விஷயம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், இதனால் ஊழியர்கள் பல சலுகைகளை இழப்பதாக கருதப்பட்டது. அதனால் மீண்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!

அதாவது ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே முக்கிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்கும் என்றும் அதே நேரத்தில் ஒப்பந்தக்காரர்களின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவுட்சோர்ஸ் ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்துவோம் என்று CWC உறுப்பினரும், மாநில கட்சியின் பொறுப்பாளருமான ராஜீவ் சுக்லா கூறி இருக்கிறார்.

இது தவிர காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் குறித்தும் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்திருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த மாதத்தில் நடைபெற்ற 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களை உடனடியாக ராஜினாமா செய்யும் படி சோனியா காந்தி அறிவுறுத்தி இருந்தார். இதற்கிடையில் வரவிருக்கும் ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவதாக உறுதி கூறி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!