அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் – காங்கிரஸ் உறுதி!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
சமீப காலமாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது கடந்த சில வருடங்களாக அமலில் இருந்து வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் போதுமான அளவு பலன்கள் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அவ்வப்போது தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.
PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அதாவது, ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்ராவுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக CLP தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி பொது மன்றத்தில் உரையாற்றும் போது, ‘மாநில அரசு கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு கேள்வித்தாள் கசிவு வழக்கில் FIR பதிவு செய்வதை இரண்டு நாட்கள் தாமதப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பியோட அனுமதித்தது.
Exams Daily Mobile App Download
இதனால் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார். ஆனால் அது இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த சூழலில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிவு வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிறையில் அடைக்கும். மேலும், மாநில அரசு ஊழியர்களது நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் கட்சி ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்படும்’ என்று பேசியுள்ளார்.