தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பட்ஜெட்டில் ஏமாற்றம்!
தமிழக பட்ஜெட் தாக்கல் அரசு உழியர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இது குறித்த அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறுகின்றனர்.
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி வழங்கப்பட்டு, மேலும் வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
Post Office தினசரி ரூ.50 முதல், பணத்தை அள்ளித்தரும் சூப்பர் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
ஆனால் தற்போது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மார்ச்18) நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் ஓய்வூதியத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். முதல்வர் முக ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதனை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.