தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்!
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு திமுகவினர் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அடுத்த வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2003ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் பணி காலத்தின் போது ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – குறைந்த கொரோனா நோய்த்தொற்று பரவல்!
இதனை எதிர்த்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Exams Daily Mobile App Download
இக்கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தமிழ் படித்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எமிஸ் வலைதளத்தை கையாள தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் அமைச்சரின் வார்த்தைக்கு இணங்க ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் சமரசம் கிடையாது, போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.