தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு தரப்பு முடிவு என்ன!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கு கடந்த பல வருடங்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2003ம் ஆண்டு முதல் பல ஓய்வூதிய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு தரப்பு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அது போன்ற சலுகைகள் இல்லாமல் தான் போனது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!
இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்பு பின்பற்றபட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தினை தான் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தது. இது ஒரு புறம் இருக்க, திமுக அரசு ஆட்சி அமைக்கும் முன்பு தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைத்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வரும் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி இன்று வரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த திட்டத்தினை செயல்படுத்த அரசு ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அமைச்சர் பிடிஆர் ஒரு பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அதனை ஆய்வு செய்து முதல்வர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.