தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனை தொடக்க காலத்தில் இருந்து அனைவரும் எதிர்த்து வந்தனர். மேலும் இன்று தமிழக சட்டசபையில் கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய பென்ஷன் திட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணி நிறைவு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதனை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அம்பலப்படுத்தியது. இத்திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கின் கீழ் அத்தொகை சேமிக்கப்படும். மேலும் இதில் அரசு சார்பாகவும் கூடுதலான தொகை செலுத்தப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது ஒரே தவணையாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் இம்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம் அறிக்கை!
இதற்கு தொடக்க காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் கல்வித்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற உள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும் கல்வித்துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பேட்ரிக் கூறியதாவது, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும். அத்துடன் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு டெட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த 2010ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.