தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!
மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில், தற்போதைய அரசின் இருவேறு நிலைப்பாடு குழப்பங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பேரவை காலங்களில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரிப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றிருந்தது. இதில் நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வூதியம் குறித்த சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
Shawarma பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – தமிழகம் முழுவதும் தொடரும் ரெய்டு! தரமற்ற இறைச்சிகள் பறிமுதல்!
இந்த தகவல் தற்போது குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் பேசும் போது, ‘தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதில் நிதி சிக்கல் இருக்கிறது. முதலில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக ஆண்டு தோறும் ரூ.24,000 கோடி செலவிடப்பட்டது. இதுவே, புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.3,205 கோடி என்ற அடிப்படையில் தனி நபர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வரை செலவாகிறது. அது போல முன்னாள் நீதிபதிகள், எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்துக்கு ரூ.39,000 கோடி செலவாகியுள்ளது. இப்போது அரசின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியாக உள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவது சிக்கல்களை உருவாக்கும். இருந்தாலும் முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டால், நான் அதற்கு கட்டுப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த போது ரூ.5.75 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை இருந்தது. இதனை சரி செய்யும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் உருவாகியுள்ளது. இந்த நிதி நிலைமை சரியானதும் OPS மீட்டெடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இப்போது 2 அமைச்சர்களின் இருவேறு கருத்துக்கள் ஊழியர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பேசியவர்கள், ‘அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துப்படி, தமிழகத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை இத்திட்டம் அநாதைகள் ஆக்கும். உலகப் பொருளாதாரத்தை மாநில அரசு ஊழியர்களுக்கான செலவுகளுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. அதனால் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கருத்தை ஏற்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.