NPS திட்டம் வேண்டாம்.. நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி!
நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் உள்ள பல மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆனால் தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்திவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அது மக்களை தவறான பாதையில் அழைத்து செல்ல செய்யப்படும் முயற்சி என தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டைதாரர்கள் மறந்தும் கூட இதை செய்யாதீங்க.. UIDAI வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், இது மாநில அரசுகளின் கருவூலத்தை பொறுத்தது என தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் தான் மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்த முன்வரும் என அவர் தெரிவித்தார்.