பழைய ஓய்வூதியத் திட்டம்.. அடுத்த கட்டத்திற்கு சென்ற அரசு ஊழியர்கள் – போராட்ட பூமியான கர்நாடகா!
நாட்டில் உள்ள அரசு ஊழியர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவேண்டும் என்பது தான். இந்நிலையில் கர்நாடக அரசு ஊழியர்கள் பெலகாவி மாவட்டத்தில் இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.
பழைய பென்ஷன் திட்டம்:
கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்யவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரியும் அம்மாநில அரசு ஊழியர்கள் மாநிலம் தழுவிய ‘OPS சங்கல்ப் யாத்திரை’ என்ற பேரணியை முன்னெடுத்து உள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த பேரணி பெலகாவி மாவட்டத்தில் நடத்துள்ளது. அந்த பேரணியில் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக செய்யவேண்டிய அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
தமிழக மக்கள் நவ.10 கவனமா இருங்க.. மிக கனமழை அபாயம் ..வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
Exams Daily Mobile App Download
மேலும் அம்மாநில அரசு ஊழியர் சங்க தலைவர் சாந்தாராம், NPS என்பது மத்திய அரசு சார்ந்த திட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாகி உள்ளது. அது போல கர்நாடகா மாநிலத்திலும் பழைய பென்ஷன் திட்டம் அமலுக்கு வர வேண்டும் என தெரித்துள்ளார்.