பம்பர் லாட்டரி…இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் OPS திட்டம் அமல் – அதிரடி உத்தரவு!!

0
பம்பர் லாட்டரி...இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் OPS திட்டம் அமல் - அதிரடி உத்தரவு!!
பம்பர் லாட்டரி...இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் OPS திட்டம் அமல் - அதிரடி உத்தரவு!!
பம்பர் லாட்டரி…இந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் OPS திட்டம் அமல் – அதிரடி உத்தரவு!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்களுக்கு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

Go First விமான நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு – டிஜிசிஏ நடவடிக்கை!

மேலும் தற்போது பல மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது, ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, மத்திய ஆயுதப்படை போலீஸ் படையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்கான வழிமுறைகளை 8 வார காலத்திற்குள் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!