தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்குமா? முதலீடு விபரம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்குமா? முதலீடு விபரம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்குமா? முதலீடு விபரம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்குமா? முதலீடு விபரம்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரையிலும் வழங்கப்படாமல் இருந்து வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழான தொகை இனியாவது வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தான் 10 வருடங்களுக்கும் மேலான கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய திட்டம்:

நாட்டில் மேற்கு வங்க மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படாமல் உள்ளது என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த 5.88 லட்சம் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021ம் நிதியாண்டில் அரசின் விலக்க குறிப்பில் ரூ.44,769 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – 2ம் கட்ட கலந்தாய்வு!

ஆனால் 2008ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டின் முன் தேதியிட்டு அரசு ஓய்வூதிய தொகை எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் இதனை ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்கள், பனியின் போது உயிரிழந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறமுடியாமல் 23,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக 2019ம் ஆண்டு முதன் முறையாக ரூ.25,000 கோடி ஆயுள் காப்பீடு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதில், தற்போது வரை ரூ. 25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து தற்போது 28,269.13 கோடி உள்ளது.

முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு – கள நிலவரம்!

மேலும், ஏல அடிப்படையில் கருவூலத்தில் ரூ.16,500 முதலீடு என்று மொத்தம் ரூ. 44,769 கோடி முதலீடு செய்யப்ட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. இதனால் இனியாவது குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூத திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள சுமார் 6 லட்சம் ஊழியர்களும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 23,000 பெரும் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!