தமிழகத்தில் 25% பென்ஷனுடன் பழைய ஓய்வூதிய திட்டம் – விரைவில் முக்கிய அறிவிப்பு?
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கைளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அதிமுக தலைமையிலான அரசும், நிபுணர் குழுவை அமைத்ததை தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
செப்டம்பருக்கு முன் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அசாம் கல்வித்துறை வட்டார தகவல்கள்!
இதை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திரும்ப பெறப்படும் என திமுக சார்பில் தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியமைத்ததை தொடர்ந்து பழைய ஓய்வூதியம் விரைவில் திரும்ப பெறப்படும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தலைமை செயலக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருவரது பணி ஓய்வுக்கு பின் அவரது இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், 25% ஓய்வூதியம் வழங்கவும், முன்பணம் பெறும் கால வரம்பை நீட்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பானது வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என கூறப்படுகிறது.