தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!
தங்களின் பல கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக்கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஓய்வூதியதாரர்கள் போராட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர். பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கூடுதல் ஓய்வூதியம் தொடர்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. முதலில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அசத்தல்! முழு விவரம் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அதனால் அவர்கள் அரை நிர்வாண போராட்டத்தை கைவிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திருப்பத்தூர் பாலம்மாள் காலனியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் 30க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் விருதுநகர் மாவட்டத்திலும் 50க்கும் மேற்பட்டோர் ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்