மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அருமையான வாக்குறுதி!
தற்போது 5 மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் அரசு ஊழியர்களுக்கென்று ஒரு சிறப்பான வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு
இந்திய முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அத்துடன் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!
கொரோனா பரவல் மேலும் பரவாமல் இருக்க கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவானது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் 2.14 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் மார்ச் 10ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்த தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக மொஹாலியில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றதில் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் கூறியதாவது, தான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அத்துடன் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த அனைத்தும் நீக்கப்படும். மேலும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.