மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதற்கு பிறகு சில நிபந்தனைகளுடன் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி அவ்வப்போது அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் தேர்வில்லாத வேலை – 38,926 காலிப்பணியிடங்கள்!
இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் அதற்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓய்வூதியப் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தம் நிறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா? என ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.