தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வருக்கு கடிதம்!
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்:
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அண்மையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்.
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் – 4வது நாள் போர்!
இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் 1968 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாதம் ஓய்வூதிய தொகை ரூ.20 என்று தொடங்கப்பட்டது, இருப்பினும் அரசு ஊழியர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டியில் KKR உடன் மோதல்!
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த 2004 முதல் நிறுத்தப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் அடிப்படையில் யாருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மேலும் ஏப்ரல் 1, 2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். எனவே தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.