தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. அதன்படி தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படியானது 14 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வழங்கி வந்த அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மாதந்தோறும் வழங்கி வந்தது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – PHH கார்டாக மாற்றுவது எப்படி?

மேலும் அரசு ஊழியர்கள் உயிரிழந்த பின்பும் கூட இந்த குறிப்பிட்ட தொகை அவரின் மனைவிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 2003ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்குமாறு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜன.11 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – வெளிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு!

இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியா்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பாா்வையாளா் சங்கம் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் மண்டலக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!