தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் முதல்வர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் உள்ளது. இதன் படி ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். மேலும் பணியின் போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 2004 ம் ஆண்டு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் பல்வேறு புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வீடு சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் ரத்து!
இதனை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்த்தனர். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர். மேலும் இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையிலும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை.
Exams Daily Mobile App Download
மற்ற மாநிலங்களில் படிப்படியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். அதனால் தமிழகத்தில் முதல்வர் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வர் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் ஓய்வூதிய விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக இருந்தால், தொழிலாளர்களுக்கும்,முழு சம்பளத்திற்கான ஓய்வூதியத்தை மருத்துவம் மற்றும் அகவிலைப்படியுடன் வழங்கவேண்டும். தொழிலாளர்கள் மட்டும் இளிச்ச வாயன்களா என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம் கண்டிப்பாக வேண்டும் முதல்வர் அமுல்படுத்துவாரா