தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த ஓய்வு பலன்களையும் பெறவில்லை. இதனால் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும் என போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதியம்
புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்றதால் மக்கள் பலரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, இதுவரை அரசு ஊழியர்களிடம் இருந்து ரூபாய் 50,000 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் PM KISAN திட்ட விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.6000 உதவித்தொகை!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனைத்து துறை சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ExamsDaily Mobile App Download
அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை மற்றும் செயலர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையிலும் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆறுமுகம் மாவட்ட செயலர் குமாரசாமி மாவட்ட துணை தலைவர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் 70 வயது நிறைவடைந்த குடும்பத்திற்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்சம் ரூ. 7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.