தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் விரைவில் அறிவிப்பு?
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைமையிலான அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசு வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்றனர்.
மே 14 முதல் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் பக்கம் 84 309 வது வாக்குறுதியாக இடம் பெற்றது. திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பல லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நம்பிக்கையில் காத்து கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.