தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அமைச்சரவையில் மாற்றங்கள்!
தமிழகத்தில் தற்போது தி மு க ஆட்சி நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசின் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சரையும், பிறபடுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரையும் மாற்றி உள்ளனர். இவ்வாறு பல மாற்றங்கள் நடந்து வருவதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்குறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
PAN, ஆதார் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு! பொதுமக்கள் கவனத்திற்கு!
ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து வருகின்றனர். மேலும் இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தங்களது அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி புரிந்த ராஜ கண்ணப்பன் மீது எழுந்த பல புகார்கள் வந்த காரணத்தால் அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் சிவ சங்கரின் உடனடி செயல் திட்டமாக மாறினால் அதில் அவர் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி அடைந்தால் இனி வரும் காலத்தில் அது அவருக்கு ஒரு முக்கிய புள்ளியாக அமையும் என்று அரசியல் தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.