தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – குஷியில் பணியாளர்கள்!
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசின் சார்பில் பரிசீலனை செய்துள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்கு உறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் – வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து வருகின்றனர். மேலும் இதற்கு தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி அரசு பணியாளர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார். அதில், 1.4.2003-லிருந்து அதிமுக ஆட்சி காலத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு, அதில் 6 லட்ச அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான வல்லுநர் குழு ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், கூடிய விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அரசாணைகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.