தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அவர்களின் சம்பள கணக்கில் எவ்வித பிடித்தமுமின்றி பணிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதனை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு மாற்றியமைத்தது. அதன்படி தமிழகத்திலும் 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த தொகைக்கு இணையாக அரசு சார்பாக தொகை செலுத்தப்படும். இந்த தொகையானது அவர்களின் பணிக்காலம் முடியும் போது இதில் இருந்து 60% ரொக்கமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இதில் மீதமுள்ள 40% LIC உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை பொறுத்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் எந்தவித பயனும் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அனைத்து ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 கோடை விடுமுறை தொடக்கம்!
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அத்துடன் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அத்துடன் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.