தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2003ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் எதிர்த்தனர். ஏனெனில் இது ஊழியர்களுக்கு பண பலன்களை அளிக்கவில்லை. அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படவில்லை நடைமுறையில் தான் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

Exams Daily Mobile App Download

அத்துடன் அகவிலைப்படியும் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செய்லபடுத்தப்படாமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – தகவல் வெளியீடு!

மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசு ஊழியர்கள் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!