தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் :
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் கடந்த 2021ம் ஆண்டு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது 34% ஆக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்டிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது விடுமுறை கடைபிடிப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய அரசு சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடம் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.