தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வரிடம் கேள்வி!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வரிடம் கேள்வி!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வரிடம் கேள்வி!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வரிடம் கேள்வி!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். அகவிலைப்படி உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்தார். இந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. மேலும் 7-வது ஊதிய கமி‌ஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்றும் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் தமிழக நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்றும் கூறினார். இதற்கு மத்தியில் ராஜஸ்தான் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

Infosys & HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH முறை? முழு விவரம் இதோ!

ஆனால் தமிழக அரசு ஏன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை இந்த விஷயத்தில் தமிழக அரசு கடுமையாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பென்ஷன் திட்டத்துக்கான பணத்தை அரசு வேறு திட்டத்திற்காக பயன்படுத்துவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் தற்போதைய நிதி நெருக்கடியில் பென்சன் போன்ற அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு அரசிடம் போதிய பணம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். திமுக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனுடன் அரசுக்காக அயராது உழைக்கும் அரசு ஊழியர்களையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!