தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? – மாநாடு ஆயத்தக்கூட்டம் ஏற்பாடு!
தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக நடக்க உள்ள மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம் தான் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதன்பிறகு அந்த ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடுகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பலன்கள் குறைவாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இதை செய்தால் வாகனம் பறிமுதல்!! எச்சரிக்கும் உயர்நீதிமன்றம்!!
Exams Daily Mobile App Download
இதனால் இத்தனை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதற்காக பலமுறை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திமுக முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,04.02.2023 அன்று சென்னையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி மாநில அளவிலான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் குறித்து விவாதித்து திட்டமிட டிசம்பர் 10 திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.