தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்? முழு விவரம் இதோ!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்? முழு விவரம் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்? முழு விவரம் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில் இதற்கு முன்னதாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள் இருந்தன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. அதன் பின் 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் சிபிஎஸ் (CPS) எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அமலில் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் பல பலன்கள் இல்லை என்பதால் ஊழியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அப்படி பலர் கோரிக்கை வைக்கும் அளவிற்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்ன பலன்கள் இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. அதன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி இருக்கிறது. அதனால் பென்சன் தொகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

மேலும் ஓய்வூதிய காலத்தில் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் கிடைக்கும். ஆனால் தற்போது அமலில் இருக்கும் தேசிய பென்சன் திட்டத்தில் பென்ஷன் தொகை ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். மேலும் பணி ஓய்வுக்கு பின் நிலையான ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் கிடையாது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் பணத்தில் தேவைப்படும்போது கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த கடனிற்கு வட்டி கிடையாது. ஆனால் தற்போது உள்ள பென்ஷன் திட்டத்தில் அந்த வசதி கிடையாது.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வுபெற்ற பின் அரசு ஊழியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து கிடைக்கும் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் உள்ள பணம் கொடுக்கப்பட்டுவிட்டால் பின்னர் பென்சன் கிடைக்காது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும். மேலும் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும். பங்களிப்பு பென்சனில் இது கிடைக்காது.

பள்ளிகளுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை? அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை , பணி ஓய்வு பணிக் கொடை ஆகியவை கிடைக்கும். பங்களிப்பு பென்சனில் இவை எதுவுமே கிடைக்காது. மேலும் அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும். இந்த வசதி தற்போது அமலில் இருக்கும் பென்சன் திட்டத்தில் இல்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!