தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளி,கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் அறிவிப்பின் அடிப்படையில் நேற்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையிலும், மற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் நடைபெறும் ஏன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த வகையில் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் வரை தேர்வு, காலை மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளுக்கான அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது.மேலும் அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் தேர்வு எழுதிய வினாத்தாள்களை மின்னஞ்சல் அல்லது கொரியர் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். மற்றும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அன்று நடைபெற தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வகையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு மாறாக, ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.