தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்ட பள்ளி கடந்த பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பிப்ரவரி 1 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிகல்விதுறை வெளியிட்டது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இதற்கிடையே, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3,936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுக்காப்பு மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன.

Exams Daily Mobile App Download

அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 300க்கும் மேலான கட்டுக்காப்பு மையங்களுக்கு வினாத்தாள்கள் தற்போது பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலம் 800க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் சென்றடைந்துவிடும். இதையடுத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்டக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், காவலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வுக்கான வினாக்கள் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் (குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!