தமிழக இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பரில் நேரடி வகுப்புகள்!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொறியியல் வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் படி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான கல்வி கட்டணத்தையும் அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் (DOTE) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி சேர்க்கை பணிகள் முடிந்துள்ளது. தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதி? இந்து முன்னணி கோரிக்கை!
இதனை தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி இவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். முறையாக 2ம் சுற்று, 3ம் சுற்று மற்றும் 4ம் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 9, 13 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில் முறையாக 4 சுற்று கலந்தாய்வில் மொத்தம் 1,36,973 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 1,51,870 இடங்களுக்கு மொத்தம் 1,38,531 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதனால், பொது கலந்தாய்விற்கு பிறகு துணை கலந்தாய்வுகள் நடத்தப்படலாம் என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
எவ்வாறாயினும், அனைத்து மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகளும் அக்டோபர் 25ம் தேதி முடிகிறது. தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்களை பெற்ற மாணவர்கள் தங்களின் கல்லூரியில் சேர்க்கையை முடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வு பணிகள் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ முடிவுகள் ஏதும் வெளியிடப்படவில்லை. கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகள் அரசால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.