அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – நேரடி வகுப்புகள் இல்லை!

0
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - நேரடி வகுப்புகள் இல்லை!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - நேரடி வகுப்புகள் இல்லை!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – நேரடி வகுப்புகள் இல்லை!

அண்ணா பல்கலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அவசியம் இல்லை என்றும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டால் போதும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் குறித்தும் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை மீண்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் அண்ணா பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (நவ.8) முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதன்படி, பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் கிடையாது. டிசம்பர் 1ம் தேதி முதல் அண்ணா பல்கலை கல்லூரிகளில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள் கல்லூரிகளில் நேரடியாக நடத்தப்படும். அதன் பிறகு மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஜனவரி மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். முதுநிலை மற்றும் முழுநேர பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும், பி.ஆர்க். படிப்பு மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் நவ.11 வரை இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும், அகமதிப்பீடு தேர்விலும் துறை அளவிலான தேர்வுகளில் ஒரே மாதிரியாக 60 சதவிகிதம் : 40 சதவிகிதம் மதிப்பெண் அமைக்க முடிவு செய்துள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வுகள் இரண்டும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பல்கலைக்கழக பருவத் தேர்வில் எழுத்துத் தேர்வுகளில் 60 மதிப்பெண்களாகவும், அகமதிப்பீடு மதிப்பெண் 40 மதிப்பெண்களாகவும் மாற்றப்படும். அனைத்து பொறியியல் படிப்புகளிலும் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தாள்களுக்கு 60%: 40% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!