அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள்!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் நேரடி வகுப்புகள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்தும், சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆண்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
Airtel வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம்!
மேலும் கடந்த ஆண்டுக்கான அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் பெரும்பாலான கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனாலும் அண்ணா பல்கலை மாணவர்களின் நலன் கருதி இதுவரை நேரடி வகுப்புகள் தொடங்காமல் இருந்தது. அதனால் அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேலுள்ள 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைகழகத்தின் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஜனவரி மாதம் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரிக்கு பிறகும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.